இன்று முதல் பாடசாலை விடுமுறை

கொழும்பு, பெப் 7: நாட்டிலுள்ள அனைத்து அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் திங்கள்கிழமை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை திங்கள்கிழமை தொடங்கி, மார்ச் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறுவதை கருத்தில் கொண்டு பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

இதேவேளை, இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் அனைத்தும் மார்ச் மாதம் 7ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *