திடீர் மின்வெட்டும் அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டம் – ஜோன்ஸ்டன்

திடீர் மின்வெட்டும் அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டம் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை திட்டத்தைத் தடுப்பதே இவர்களின் நோக்கம் எனவும் குற்றம் சாட்டினார்.

குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

எரிவாயு வெடிப்பின் பின்னணியிலும் இவ்வாறான சாதி இருப்பதாக முன்னர் தெரிவித்தபோதும் எதிர்க்கட்சியினர் கேலி செய்ததாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

அத்தோடு வழிபாட்டுத் தலங்களில் வெடிகுண்டுகளை வைப்பதன் நோக்கம் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதை உலகுக்குக் காட்டுவதே என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *