
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் அதிகரித்து வரும் ட்ரான் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்கள் காரணமாக, பாதுகாப்பிற்காக france இடம் இருந்து rafale விமானங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டிருந்த கருத்தின்படி, ஐக்கிய அரபு ராஜ்ஜியம் தொடர்ந்து தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும் இதற்கு எதிராக பிரான்சின் ரபேல் விமானங்கள் பாதுகாப்பு வழங்கும் எனவும் கூறியுள்ளார்.
இதற்காக 7 ரஃபேல் விமானங்கள் உளவு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புகளை செய்வதற்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை அபுதாபியில் உள்ள அல் டப்றா விமான நிலையத்தில் நிறுவப்பட்டு செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார்.