திடீரென நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருளின் விலை

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை நள்ளிரவு முதல் திடீரென அதிகரித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 7 ரூபாவாலும், ஒடோ டீசலின் விலை 3 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, லங்கா ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 183ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஒரு லீட்டர் ஒடோ டிசல் 124 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *