
கொழும்பு, பெப் 7: நாட்டில் பராசிட்டமால் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது என்று மருந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மருந்து உற்பத்தியாளர்கள் கூறுகையில் “பராசிட்டமால் மாத்திரையை உற்பத்தி செய்யத் தேவையான மூலப்பொருட்களின் விலை நாட்டில் அதிகரித்துள்ளது. ஆனால், பாராசிட்டமால் மருந்தின் கட்டுப்பாட்டு விலையாக ரூ.200 மாறாது உள்ளது. இந்நிலையில், அரசின் கட்டுப்பாட்டு விலைக்கு உட்பட்டு, பாரசிட்டமால் மாத்திரையை உள்ளூரில் தயாரிக்க முடியாதுள்ளது. இதனால், நாட்டில் பராசிட்டமால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது என்று மருந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.