ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பிணையில் விடுதலை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா திங்கள்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

நீதியரசர்கள் மேனகா விஜேசுந்தர, நீல் இத்தவெல ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

முன்னதாக, பிணையில் விடுவிக்க கோரி அவர் தாக்கல் செய்த இரண்டு மனுக்களை புத்தளம் உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இதைத் தொடர்ந்து, பிணைகோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அவர் நாடியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *