
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்த 21 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 21ம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களது இழுவைப் படகுகள் இன்றையதினம் காரைநகரில் ஏலம் விடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.