
நாட்டில் இன்றைய தினம் மின்சாரத் தேவை 2750 மெகா வோட்டை எட்டினால் மின்வெட்டுக்குச் செல்ல நேரிடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவிக்கையில்,
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும்போது சுமார் 2750 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது.
மின் வெட்டு தொடர்பான தீர்மானங்களை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவே எடுக்க வேண்டுமே தவிர மின் பொறியியலாளர்கள் எடுக்க முடியாது..
கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு இன்னமும் மர்மமாகவே காணப்படுகின்றது.
எனினும் மின்வெட்டுக்கான காரணம் குறித்து இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளருக்குக்கூட தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பருத்தித்துறையில் நபரை கடத்திச் சென்று கொள்ளை! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்