எரிபொருள் விலை உயர்வு, மக்கள் மீது மற்றொரு சுமை என்கின்றது எதிர்க்கட்சி

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் எரிபொருள் விலையை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இதனை கூறினார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் 137 ரூபாயாக இருந்த ஒரு லீட்டர் பெற்றோல் விலை தற்போது 184 ஆக உயர்ந்துள்ளது என சுட்டிக்காட்டினார்.

ஆட்சிக்குவந்து சில வாரங்களுக்குள் எரிபொருள் விலையை அதிகரித்ததோடு விலைவாசியை மீண்டும் ஒருமுறை அதிகரித்து மக்களுக்கு மேலும் சுமையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்ட்.

இதேவேளை 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே வெளிநாட்டு கையிருப்பு இருப்பதாக குறிப்பிட்ட அவர், சரியான அன்னிய கையிருப்பு தொடர்பான தரவுகளை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

தற்போது 47,000 மெட்ரிக் டொன் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு சுமார் 2,000 கப்பல்கள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன என காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யவோ அல்லது துறைமுகத்தில் சிக்கியுள்ள பொருட்களை விடுவிக்கவோ அரசாங்கத்திடம் நிதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *