
1998 என்ற துரித எண்ணுக்கு அழைத்தால், அத்தியாவசிய உணவுப் பொதியொன்றை நியாயமான விலையில், வீட்டுக்கே கொண்டு வந்து தரும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரங்களில் மீண்டும் அரசியின் விலை அதிகரித்துள்ளது. முன்னர் பிடகொடுவ வியாபார வர்த்தகமையத்திற்கு சென்றோம். அங்கு சாதாரண விலைக்கு அரிசி விற்கப்படுகிறது. அதன் பின்னர் அரிசி மாபியாவை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. ஆகையால் இன்று அரிசியின் விலை குறைந்துள்ளது.
தற்போது அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஆனால் சதொசவில் சாதாரண விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
5 பொருட்கள் உள்ள பொதி 998 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு அரசி 5 கிலோ , நூடுல்ஸ் 400 கிராம், தேயிலை, மஞ்சள் தூள், நெத்திலி ஆகிய பொருட்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்களை வீட்டுக்கு வந்து வழங்குவதற்கு “bell solutions” என்ற நிறுவனம் முன்வந்துள்ளது. 1998 என்ற இலக்கத்துக்கு அழைத்தால் பொருட்களை 48 மணித்தியாலங்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.