களனி பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்: 9 பேர் பிணையில் விடுதலை

களனி பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (திங்கட்கிழமை) வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராகம மருத்து பீட மாணவர் விடுதி வளாகத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத குழுவினரால் கடந்த முதலாம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலில் 4 மாணவர்கள் காயமடைந்த நிலையில் சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *