
நாட்டில் எதிர்காலத்தில் எரிபொருட்களின் விலை தலா 40 ரூபாவால் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக கனிய எண்ணெய் வள சங்கத்தின் தலைவர் பந்துல சமன் குமார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் கனிய எண்ணெயின் விலை உயர்வுக்கு பல காரணங்கள் காணப்படுகிறது. உலக சந்தையில் கனிய எண்ணெயின் விலை அதிகரிப்பு, வரி, டொலர்கள் அதிகரிப்பு இவ்வாறு பல காரணங்களை கூற முடியும். இவற்றை கருத்திற் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுகிறது. எதிர்காலத்தில் ஒரு லீற்றர் டீசலின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கலாம்.
ioc இந்த எரிபொருள் விலை உயர்வு தற்போது ஏற்பட்டுள்ளது. அவற்றின் விலையை உயர்த்ததோ குறைக்கவோ எம்மால் முடியாது. எனவே தொழிற்சங்கத்தின் ரீதியாக கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும்.
2006 ஆம் ஆண்டு எண்ணெய் கிடங்குகளை ioc இன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தமையால் இன்று அவர்கள் வேண்டிய நேரம் விலை உயர்த்துகின்றனர். iocக்கு நட்டம் ஏற்பட்டுமாயின் அவர்கள் விலை உயர்த்துவார்கள்.- என்றார்.