எட்டு முன்னாள் எம்பிக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு, பெப் 7: பதவிக்காலம் முடிந்த பிறகும், அனுமதியின்றி உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிருந்ததற்கான, அபராதத் தொகையை செலுத்தத் தவறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நாடாளுமன்ற நிர்வாகத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அரசு மூத்த அதிகாரி கூறுகையில் “இந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகும், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை காலி செய்யாமல் அதில் தொடர்ந்தும் தங்கியிருந்தனர். மேலும், இவர்கள் குறித்த நேரத்தில் வளாகத்தை காலி செய்யத் தவறியதற்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தத் தவறியுள்ளனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நாடாளுமன்ற நிர்வாகத் திணைக்களம் முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ குடியிருப்பை காலி செய்யத் தவறினால் நாளொன்றுக்கு ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *