ஜனாதிபதி கோட்டா சொன்னதைச் செய்வார்! – முருத்தெட்டுவ நம்பிக்கை

ஜனாதிபதி பொய்யான வாக்குறுதிகளை வழங்கவில்லை, சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளை அவர் தீர்த்து வைப்பார் என முருத்தெட்டுவ ஆனந்ததேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நம் அனைவருக்கும் பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கொரோனாத் தொற்று பரவி உள்ள நேரத்தில் தொழில் சங்கங்கள் தமது தேவைக்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நல்லது இல்லை.

போராடுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அரசு என்ற வகையில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள்.

ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் இப்போது எம்மிடம் கூறுவது கொரோனாத் தொற்று காலத்தில் சுகாதாரத்தைப் பற்றி கவனத்திற்கொள்ளுங்கள். உங்களிற்கான தேவையை நாங்கள் பூர்த்தி செய்து தருகிறோம்.

சுகாதார தொழில் சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். ஆனால் தாதியர் சேவையில் எந்தப் பாதிப்பும் இல்லை.

சுகாதார தொழில் சங்கங்கள் முன்வைத்த 7 கோரிக்கைகளில் 4 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகுதி 3 கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி என்னிடம் கூறியுள்ளார். – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *