
ஒருநாள் உறங்கி விட்டு மறுநாள் விழித்தால் பொருட்களின் விலை எகிறும் நாடாக இலங்கை காணப்படுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிருப் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்.
இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
அரசு விலைக் கட்டுப்பாட்டை நீக்கியது. காலை ஒரு விலை மாலை ஒரு விலை என்ற நிலைக்கு சென்று விட்டது.
இப்போது எரிபொருள் விலை மாதம் ஒருமுறை அதிகரிக்கும் நிலையைக் காண்கிறோம்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை குறையும் போதும் இந்த நாட்டில் எரிபொருளின் விலை குறைவதாக தெரியவில்லை. விலையை கட்டுப்படுத்த விலை நிர்ணயம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை.
ஐ.ஓ.சி விலை நேற்று முதல் மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த விலையையும் உயர்த்த பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் அனுமதி பெற வேண்டும். நாளை மற்றும் நாளை மறுநாள் மண்ணெண்ணெய் அதிகரிக்கப்படும்.
சமீபகாலமாக பெட்ரோலியத் துறை அமைச்சர் சில்மிஷம் அடிப்பதைப் பார்த்தோம். இன்று அரசால் இவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசு செய்வது பணத்தை அச்சடிப்பது மட்டுமே.
அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடும் நாள் வெகு தொலைவில் இல்லை. அரசுக்கு எதிராக கலவர சூழல் உருவாகியுள்ளது. இந்த நாடு ஒரு பக்கம் சீனாவுக்கும் மறுபக்கம் இந்தியாவுக்கும் அடிபணிந்து விட்டது.
ஒரு மோசடிக்காரன் நிதியமைச்சராகி விட்டதாக நமக்குத் தோன்றுகிறது. எனவே, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படாது. நாட்டில் நிதி ஒழுக்கம் இல்லை என்பதை நிதி அமைச்சரின் பேச்சு காட்டுகிறது.- என்றார்.
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள் அறிவிப்பு