இராணுவத்தினரால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பொருட்பொதிகள் வழங்கிவைப்பு

யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கஜீவ செனரத் யாப்பாவின் எண்ணக்கருவிற்கு அமைவாக, யாழ். மாவட்டத்தின் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள், மாணவர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கமைய, குறித்த பகுதியில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 50 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசனைப் பொருட்பொதிகளும், 50 மாணவ – மாணவிகளுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.

இவ் வேலைத்திட்டமானது கட்டளைத்தளபதியின் தலைமையில் நேற்று காங்கேசன்துறை திஸ்ஸ விகாரையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில், ஆகமத் தலைவர்களும் கலந்துகொண்டு கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் மாணவ – மாணவிகளுக்கான ஆசிர்வாத சொற்பொழிவுகளை வழங்கி அவர்களின் நலன்வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது.

மேலும் கர்ப்பிணித் தாய்மார்களின் நலனைக் கருத்திற்கொண்டு 4 ஆவது வைத்தியப் படையணியினரின் வைத்தியர்கள் மற்றும் ஏனைய வீரர்களின் ஒத்துழைப்புடன் மருத்துவ முகாம் மற்றும் வைத்திய ஆலோசனைகளும் தேவையான மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு, ஆகமத் தலைவர்கள், வடக்கு பிரதேச கட்டளைத்தளபதி, 51, 52 மற்றும் 55 காலாட் படைப்பிரிவுகளின் சேனாதிபதிகள், படைப்பிரிவுகளின் படைத்தளபதிகள், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் நிர்வாக அதிகாரிகள், உயரதிகாரிகள், மாணவர்கள் மற்றும் தேசவாசிகள் உட்பட குறிப்பட்ட அளவிலானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *