
அனல் மின் நிலையங்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்கும் வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் இல்லையேல் எதிர்காலத்தில் மின் நெருக்கடி அதிகரிக்கும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது அனல் மின் நிலையங்களுக்கான எரிபொருள் தவணை முறையில் விநியோகிக்கப்படுவதாகவும், இதனால் மின் உற்பத்தி நிலையங்கள் அவ்வப்போது செயலிழந்தமையும் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்படும் கோளாறுகளுக்கு ஒரு காரணம் என சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலத் தெரிவித்துள்ளார்.
இச்சூழ்நிலை காரணமாக நீர் மின் நிலையங்கள் அதிகளவில் இயங்கும் நிலையில் எதிர்வரும் காலங்களில் நீர் பற்றாக்குறை ஏற்படும்.
நீர் மின் உற்பத்தியை தற்போதைய நிலைக்கு மட்டுப்படுத்தி, தண்ணீரை சேமிக்க வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும், மாற்று வழியில்லை.- என்றார்.