
கொழும்பு, பெப் 7: கொரோனா தொற்றால் கடந்த 24 நேரத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,621 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் 17 ஆண்கள், 9 பெண்கள் ஆகும்.
இறந்தவர்களில் 6 பேர் 30-59 வயதுக்கு உட்பட்டவர்கள். இருவர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள், மீதமுள்ள 18 பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஆகும்.