
கொழும்பு, பெப் 7: மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக
வாகன ஒழுங்குமுறை, பேருந்து போக்குவரத்து சேவைகள் மற்றும் ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் கார் தொழில்துறை ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஆனால், இது தொடர்பான சுகாதாரத்துறையின் சுற்றறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக கண்டியில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில் ” மூன்று தடுப்பூசிகளை பெற்றவர்கள் மட்டுமே பொது போக்குவரத்தில் பயணிக்க முடியும் என்று சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்தால், அதை நாங்கள் அமல்படுத்தத் தயாராக உள்ளோம். இது தொடர்பாக, சுகாதாரத்துறை எமக்கு இதுவரை எழுத்து பூர்வமாக அறிவிக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.