தமிழக மீனவர்கள் 21 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 தமிழ்நாடு மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி இரண்டு படகுகளில் நுழைந்த 21 தமிழக மீனவர்களை வடமராட்சி மீனவர்கள் சுற்றி வளைத்து தடுத்து வைத்திருந்தனர்.

வடமராட்சி மீனவர்களிடமிருந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பொறுப்பெடுத்து, தமிழக மீனவர்களை கைது செய்தனர்.

அன்றைய தினம் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மறுநாள் 1ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை நேற்று வரையில் விளக்க மறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

அந்நிலையில் குறித்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது, 21 மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளால் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது. இதற்கு அவர்களிடம் வாக்குமூலம் பெறவதற்கு அனுமதி வழங்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு மன்று உத்தரவிட்டது.

மேலும் அவர்களின் வள்ளங்களில் இருந்து மீட்கப்பட்டு பதப்படுத்திய நிலையில் உள்ள சுமார் 100 கிலோ கிராம் மீனை விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்த மன்று விற்பனை செய்யும் பணத்தை நீதிமன்றத்தில் செலுத்துமாறு கட்டளை பிறப்பித்துள்ளது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *