சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளை தடுக்க ஜப்பான் அரசு நன்கொடை

கொழும்பு, பெப் 8: சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய வாகனங்கள், உபகரணங்களை ஜப்பான் அரசு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலக வளாகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இவற்றை வழங்கினார்.

நன்கொடையாக வழங்கப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்களின் பெறுமதி ரூ. 700 மில்லியன் ஆகும். இதில், 28 லேண்ட் க்ரூஸர்கள் வாகனங்கள், ஒரு பிராடோ வாகனம், வெடிபொருட்கள் மற்றும் போதைப் பொருட்களைக் கண்டறியும் மொபைல் ஸ்கேனர் யூனிட் உள்ளிட்ட உபகரணங்கள் அடங்கும்.

இந்நிகழ்வில், அமைச்சர் சரத் வீரசேகர, ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *