
கொழும்பு, பெப் 8: இரண்டு முக்கிய சட்ட சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முதலீட்டாளர் தகராறு உயர் நீதிமன்றத்தை (IDHC) நிறுவவும், புதிய நடுவர் சட்டத்தை உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக நீதி அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஷமிர் ஜவாஹிர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “எந்தவொரு முதலீட்டாளர்களும் அவர்கள் முதலீடு தொடர்பாக எழும் பிரச்சினைகளை விரைந்து தீர்க்க விரும்புவார்கள். பிரச்சினைகளை விரைந்து தீர்க்கும் வகையில் சட்ட அமைப்பு விரைவான தீர்வை அனுமதிக்காவிட்டால், அதை தமது முதலீட்டுக்கு ஆபத்தான சூழலாக பார்ப்பார்கள. புதிய சட்ட திருத்தங்களால், முதலீட்டாளர்களின் பயம் நீங்கும்” என்றார் அவர்.