சுகாதார ஊழியர்கள்- அரசு பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தம்

கொழும்பு, பெப் 8: வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வரும் சுகாதாரத் துறை ஊழியர்கள்தொழிற்சங்கங்களுக்கும், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர தாதியர், உதவி மற்றும் துணை மருத்துவ சேவைகள் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

சம்பள முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள் சங்கங்கள் திங்கள்கிழமை முதல் இந்த காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், கொழும்பிலுள்ள சுகாதாரஅமைச்சகம் நோக்கி, சுகாதாரத்துறை ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *