
எந்த காரணமும் இல்லாமல் ஒரு நாளில் மூன்று செல்பிக்கு மேல் எடுத்தால் அது மன அழுத்தத்தின் அறிகுறி என மனநல மருத்துவர் கமல் எஸ்.ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பொரலஸ்கமுவ மகாவித்தியாலயத்தில், பாடசாலை மாணவர்களின் இணையம் மற்றும் தொலைபேசி, போதைபொருள் தொடர்பான உளவியல் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இணைய அடிமைத்தனம் போதைக்கு அடிமையானதைப் போன்றது. அது பாரிய நோய்களுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.