பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில்  போராட்டம்!

பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில்  போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் பழைய மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது பெண்கள்,சிறுவர்களின் உரிமையை பாதுகாத்தல், அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களும் எழுப்பப்பட்டன.

தொடர்ந்து குறித்த போராட்டக்குழுவினர் ஏ9 வீதி ஊடாக மாவட்ட செலகம் வரை சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *