முள்ளிவாய்க்கால் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்!

புதுக்குடியிருப்பு – முள்ளிவாய்க்கால் வீதியில் இரட்டை வாய்க்கால் சந்திக்கு அண்மித்த பகுதியில் பேருந்தில் மோதி இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இவ்விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் பின்னால் உந்துருளியில் வேகமாகப் பயணித்த இளைஞன் பேருந்து திடீரென பயணிகளை இறக்க நின்றபோது பேருந்தின் பின்பக்கத்தில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் உந்துருளியின் முன்பக்கம் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், விபத்தில் காயமடைந்த இளைஞன் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *