தங்கம் வென்ற யுவதியை கௌரவித்த எதிர்க்கட்சித் தலைவர்!

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் இந்திராதேவி என்ற யுவதி கடந்த மாதம் 18 ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஸ்ரீலங்கா பாகிஸ்தான் சவேட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம் இல்லாமல் நாட்டிற்கும் பெருமை சேர்த்திருந்தார்

தந்தையை இழந்த நிலையில் சாதித்த குறித்த யுவதியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி கௌரவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைய தினம், குறித்த யுவதியை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு அழைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவர்களுடைய பாரியார் ஜலனி பிரேமதசா ஆகியோர் யுவதியை கௌரவித்தோடு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பணப் பரிசினையும் வழங்கியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினுடைய முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசாமியின் ஏற்பாட்டில், முல்லைத்தீவிலிருந்து குறித்த யுவதி கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மாதர் சக்தியினூடாக ரூபா 1,00,000 பணத்தினை இந்துக்காதேவியை ஊக்குவிக்கும் முகமாக வழங்கி வைத்ததுடன், எதிர்காலத்தில் மேலும் உதவிகளை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உறுதி வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *