
கொழும்பு, பெப் 9: ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதுடன், கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபே வர்த்தன, இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.