
கொழும்பு, பெப் 9: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரிதும் பங்கெடும் இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு இந்த அரசு தீர்வு தரவில்லை என்று ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சபையில் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் பேசுகையில் “இந்திய மீன்வர்களின் அத்து மீறல்கள் இலங்கை கடற்பரப்பில் அதிகரித்து காணப்படுகிறது. வடக்கு மீனவர்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். அவர்கள் கடலில் தமது உயிருக்கு பாதுகாப்பும், நமது நாட்டு கடல் வளம் அழிக்கப்பட கூடாது என்று தான் போராட்டம் செய்கிறார்கள்.
ரோலர் படகு தடை உள்ளிட்ட முக்கிய சட்டங்கள் நாடாளுமன்றில் அமுல் படுத்தப்பட்டன.அவற்றை நடைமுறைக்கு கொண்டு வாருங்கள்.இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்டகாலமாக இழுபறியில் காணப்படுகிறது.இதற்கு உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். இலங்கை மீனவர் பிரச்சினைக்கு அரசு தீர்வு வழங்கவில்லை என்றார் அவர்.