வெசாக் பொருட்களை இறக்கத் தடை- அரசாங்கத்திற்கு கிடைத்த பெருந்தொகை வருமானம்.! samugammedia

இலங்கையில் வெசாக் அலங்காரப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை காரணமாக சுமார் 900 மில்லியன் ரூபா நிதி சேமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு தமது உற்பத்திப் பொருட்களை போட்டி விலையில் விற்பனை செய்யக்கூடிய புதிய சந்தை உருவாக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இவ்வருடம் வெசாக் அலங்காரங்கள் மற்றும் கண்காட்சிகளில் குறைவில்லை என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *