
பருத்தித்துறை – நெல்லியடி வீதியில் இன்று மாலை, 818 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்த முற்பட்ட இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை அந்தோனியார்புரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 818 கிராம் ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 6 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நெல்லியடி பொலிஸார் முற்படுத்தப்பட்டனர். மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.