யாழில் கஞ்சா வியாபாரிகளை தேடி இராணுவத்தினர் வலைவீச்சு!

யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்யும் நடவடிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

மதுவரித்திணைக்களத்தினர், பொலிசார், இராணுவத்தினர் இணைந்து குறித்த நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் கடந்த 3 நாட்களில் 10 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் தற்போது இராணுவத்தினர் மும்முரமாக செயற்படுகின்றனர். இராணுவத்தினருக்கு கிடைக்கும் புலனாய்வு தகவலின் அடிப்படையில் கஞ்சா வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்றும் செம்மணி மற்றும் நாவாந்துறை பகுதியில் இருவர் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *