உரும்பிராய் கற்ப விநாயகர் கலாசார மண்டபத்தினரின் ‘திருவள்ளுவர் விழா’

உரும்பிராய் கற்ப விநாயகர் கலாசார மண்டபத்தினர் நடாத்தும் ‘திருவள்ளுவர் விழா’ எதிர்வரும் 20.02.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப. 03.00 மணிக்கு உரும்பிராய் கற்பக விநாயகர் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.அ.ஈஸ்வரநாதன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக கம்பவாரதி. திரு.இ.ஜெயராஜ் அவர்களும், சிறப்பு விருந்தினராக சண்டிலிப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ப.கணேசன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில், விருந்தினர் வரவேற்கப்பட்டு, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தலை தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் மற்றும் இறை வணக்கம் இடம்பெறும்.

அதனை தொடர்ந்து, நாதஸ்வர வித்துவான்கள் திரு. குமரன், திரு. பாலமுருகன், தவில் வித்துவான்கள் திரு.சுதாகரன், திரு. செந்தில் ஆகியோரின் மங்கல இசை இடம்பெறும்.

திருமதி. சுஜிதா ரணிதரனின் நெறியாள்கையில் உரும்பிராய் சுந்தர நர்தனாலய மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெறும்.

வரவேற்புரையினை ஓய்வுநிலை அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தனும், ஆசியுரையினை உரும்பிராய் ஓம்பதி கற்பக விநாயகர் கலாசார மண்டப பிரதமகுரு சிவஸ்ரீ தி. கிருஸ்ண மூர்த்தி குருக்கள் அவர்களும் வழங்குவார்கள். சிறப்புரையனை பிரதம விருந்தினர் வழங்குவார்.

அதனைத்தொடர்ந்து திருக்குறள் மனனப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வும் இடம்பெறும்.

நன்றியுரையினை இராஜேஸ்வரி மண்டப உரிமையாளர் செ. திருமாறன் நிகழ்த்துவார். இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *