ஒட்சிசன் தேவைப்பாடுடைய கோவிட் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒட்சிசன் தேவைப்பாடுடைய கோவிட் நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது என மருத்துவ தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் ஒட்சிசன் தேவைப்பாடு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு என்பனவற்றில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் மரணங்களின் எண்ணிக்கையும் 17 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு பதிவாகும் மரணங்களில் 60 வீதமான மரணங்கள் பூஸ்டர் மாத்திரை பெற்றுக்கொள்ளாதவர்கள் மத்தியில் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் கோவிட்தொற்று உறுதியாளர் மொத்த எண்ணிக்கை 630599 ஆக உயர்வடைந்துள்ளதுடன், 15874 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *