புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைதான நபர் 12 வருடங்களின் பின்னர் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவர் 12 ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றின் நீதிபதி சந்திமல் லியனகேயினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த நபர் நிரபராதி என தெரிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய, யாழ்ப்பாணம் – விக்ணேஸ்வரா கல்லூரி வீதி கரவெட்டியைச் சேர்ந்த கந்தப்பு ராஜசேகர் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் ஆலோசனையின்படி இறுதி யுத்தகால பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக கொழும்பில் நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கடந்த 2010.10.19ஆம் திகதி கந்தப்பு ராஜசேகர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *