வெளிநாட்டு பயங்கரவாதக் குழுக்கள் ஆப்கானிஸ்தானில் மீள ஒழுங்கமைப்பு பெறுவதாக எச்சரிக்கை!

அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் சிறைக்கைதிகளைத் தலிபான்கள் விடுவித்துள்ளமை தொடர்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க மத்தியக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்படவுள்ள ஜெனரல் மைக்கேல் எரிக் குரில்லா இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு பயங்கரவாதக் குழுக்கள் ஆப்கானிஸ்தானில் மீள ஒழுங்கமைப்பு பெறுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டுள்ள முக்கிய சவால்களில் அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் அச்சுறுத்தலும் உள்ளடங்குகின்றது.

அங்கு அவர்கள் மீண்டும் ஒழுங்கமைப்பு பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *