போர் மூளும் சூழல் உருவாகியுள்ளதால், வீரர்களுக்காக பதுங்கு குழிகளை தோண்டும் உக்ரைன் இளைஞர்கள்!

ரஷ்யாவுடன் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைன் இளைஞர்கள் அந்நாட்டு வீரர்களுக்காக பதுங்கு குழிகளை தோண்டி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனின் கிழக்குப் பகுதியிலுள்ள மரியுபொல் (Mariupol) பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இணைந்து, ரஷ்ய படைகளை தங்கள் நாட்டு வீரர்கள் எதிர்கொள்ள ஏதுவாக பதுங்கு குழிகளை தோண்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மைகைலோ என்ற சிறுவன், ரஷ்யா தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் உள்ளதால் இரவில் உறக்கமின்றி தவித்ததாகவும், தங்கள் வீரர்களுக்கு உதவ முடிவு செய்து இந்த பணியில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இராணுவ வீரர்களுக்கு உதவுவது தங்களது பொறுப்பாகும் எனவும் அச்சிறுவன் தெரிவித்தார்.

பதுங்கு குழிகளை வலுப்படுத்தும் பணியில் 40 இற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *