வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழாவில் 5 தங்கச் சங்கிலிகள் அறுப்பு!

வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா மகோற்சவம் நேற்றைய தினம் நடைபெற்றது.

தேர் திருவிழா மகோற்சவத்திற்கு வருகைதந்த ஐந்து பக்த அடியார்களின் தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளன.

வழமையை விட நேற்றையதினம் பக்த அடியவர்கள் குறைவாக ஆலயத்திற்கு வருகை தந்திருந்த போதிலும் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *