இன்று நாம் முன்னெடுத்துள்ள, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான கையெழுத்து வேட்டை கட்சி சார்ந்து பார்க்காமல், தமிழ் மக்களின் கோரிக்கையாக பார்க்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் பேருந்து நிலையத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து வேட்டையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சி, அனுராதபுரம், காலி உள்ளிட்ட பல இடங்களில் இந்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது தமிழ் மக்களை நசுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த சட்டமூலத்தை இல்லாமல் செய்ய வேண்டும். சட்டத்தில் திருத்தம் என்று கூறிக்கொண்டு அவர்கள் சரத்வதேசத்தை திருப்திப்படுத்த பார்க்கின்றனர்.
இந்த சட்டத்தால் பாதிக்கப்படுவது நாமே. நாட்டில் பயங்கரவாதம் இல்லை என்று சொல்லி விட்டு ஆட்சிக்கு வந்தவர்கள். ஆனால் இந்த சட்டத்தை அவர்கள் கைவிடவில்லை. இதை மக்களோடு மக்களாக வெளிப்படுத்துவோம். – என்றார்.