
கொழும்பு, பெப்.16
மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் அவசியமில்லையென சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டிலோ அல்லது வைத்தியசாலைகளிலோ உயிரிழப்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் அவசியமில்லை.
எனினும், தேவைப்படுமாயின் சட்ட வைத்தியரின் விருப்பத்துடன் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.