புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமைகள் இருக்காது – சுரேஸ்

புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமைகள் இருக்காது எனவே தாம் எதிர்பார்ப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற அனைத்து தமிழ் கட்சிக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எம்மிடம் இருக்கின்ற சிலவற்றை காப்பாற்ற நினைக்கும்போது அரசாங்கம் தமிழ் மக்களிடம் உள்ள எல்லாவற்றையும் பறிக்க முயற்சி செய்கின்றது என குற்றம் சாட்டினார்.

இதன் காரணமாகவே 13 ஆவது திருத்தம் வேண்டும் என இந்தியாவிடம் தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து கோரிக்கை விடுத்தன என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆகவே, இருப்பை தக்க வைப்பதற்கு 13வது திருத்தம் அவசியமே அன்றி அது ஒருபோதும் தீர்வாகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *