இலங்கைக்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கும்: கோபால் பாக்லே 

இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா பொறுப்புடன் செயற்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், இந்திய எரிபொருள் நிறுவனத்தினால் 40,000 மெட்ரிக் தொன் டீசல் கொழும்பை வந்தடைந்துள்ளது.

இதனை பெற்றுக் கொள்வதற்காக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில துறைமுகத்திற்குச் சென்றிருந்தார். இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் கலந்துகொண்டார். எரிபொருள் கொள்வனவிற்காக 500 அமெரிக்க மில்லியன் டொலரை இந்தியா இலங்கைக்கு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *