
இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள ஜெனீவா அமர்வின் போது தென்னாபிரிக்காவின் ஆதரவை இலங்கைக்கு வழங்குமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
அதனடிப்படையில், தென்னாபிரிக்காவிற்கான இலங்கை தூதுவர் சிறிசேன அமரசேகர தென்னாபிரிக்க அதிகாரிகளுடனும் நமீபியா சிம்பாப்வே மலாவி உட்பட நாடுகளின் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது வெளிதரப்பினரால் திணிக்கப்படும் பொறிமுறைகளை விட உள்நாட்டு மோதல்களிற்கு தீர்வை காண்பதற்கு உள்நாட்டு பொறிமுறைகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேநேரம் வெளித்தரப்பினரின் ஈடுபாடுகள் தீர்வை காண்பதற்கு பதில் இனவிவகாரங்களை மேலும் குழப்பகரமானதாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மோதலின் பின்னர் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அனைத்தையும் செய்துள்ளது என தெரிவித்துள்ள தூதுவர் தேவையற்ற சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அரசாங்கம் தன்னிடம் உள்ள சிறியஅளவு வளங்களை தியாகம் செய்வதற்கும் தற்பாதுகாப்பு நிலையில் செயற்படுவதற்கும் தள்ளப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.