உணவு இறக்குமதி விவகாரத்தில் மாற்றுவழி- மத்திய கிழக்கு நாடுகளுடன் ஜீ.எல்.பீரிஸ் பேச்சுவார்த்தை

இலங்கையில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடியை அடுத்து அத்தியாவசிய உணவு மற்றும் தொழில்துறை மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிமுறைகளை அடையாளம் காணவும், விநியோக நாடுகளுடன் கலந்துரையாடவும் உப குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சீனா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் பீரிஸ் தலைமையில் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பொருட்களை இறக்குமதி செய்வதற்கான மாற்று முறைகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *