ரூ.6 மில்லியன் போதைப்பொருடன் நெல்லியடியில் இருவர் கைது

ரூ.6 மில்லியன் பெறுமதியான 818 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்த முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லியடி – பருத்தித்துறை வீதியில் வைத்தே இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். காங்கேசன்துறை அந்தோனிபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 818 கிராம் ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி ரூ. 6 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *