இலங்கை- பாகிஸ்தானுக்கு இடையிலான உறவை இளைஞர்களின் ஊடாக வலுப்படுத்த நடவடிக்கை

இளைஞர் நாடாளுமன்றத்தின் வெளிவிவகார, இராஜதந்திர உறவுகளின் பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக் மற்றும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முப்தி ஆகியோருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் உப செயலாளர் ஆயிஷா அபுபக்கர் ஃபஹாத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையின் கல்வி, விளையாட்டு மற்றும் கலாசாரம் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் அதில் காணப்படுகின்ற குறைப்பாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

அதேபோன்று கல்வி, விளையாட்டு மற்றும் கலாசாரத்தில் பாகிஸ்தான் நாட்டின் இளைஞர்களின் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இலங்கையின் விளையாட்டு துறை மேம்படுவதற்கான தேவைப்பாடுகள் குறித்தும் விசேடமாக களுத்துறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு விளையாட்டு துறையின் வளர்ச்சி குறித்தும் பேசப்பட்டதுடன் அவற்றுக்கான ஆதரவினை எதிர்காலங்களில் வழங்குமாறும் கோரப்பட்டது.

அந்தவகையில் இளைஞர்களின் ஊடாக இலங்கை பாகிஸ்தானுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த சிறந்த நடவடிக்கைகள் எதிர்காலங்களில் எடுக்கப்படும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் உப செயலாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *