பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தயாராகும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம்!

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம் எடுக்கப்படும் என அகில இலங்கை முற்போக்கு சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வேதனம் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை தமது சங்கம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது. எனினும், அதற்கான தீர்வு இதுவரையில் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெறவில்லை.

இந்த நிலை தொடருமாயின் தாம் பணிப்புறக்கணிப்புக்கு செல்ல நேரிடும் என அகில இலங்கை முற்போக்கு சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டபிள்யு.எம் ஜோதிரட்ன குறிப்பிட்டுள்ளார்.

முறையான பதவி உயர்வு வழங்காமை, வருடாந்த இடமாற்றம் வழங்கப்படாமை, தொலைபேசி கொடுப்பனவு வழங்கப்படாமை மற்றும் அலுவலக கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை உள்ளிட்ட செயற்பாடுகளால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அந்த சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டு அரசியல் கட்சி சின்னங்களை நீக்கியது தேர்தல்கள் ஆணைக்குழு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *