சைக்கிளில் சென்ற மாணவனிடம் வழிப்பறி! – யாழில் சம்பவம்

யாழ். சின்னக்கடை பகுதியில் சைக்கிளில் சென்ற பாடசாலை மாணவனை வழிமறித்து, அச்சுறுத்தியதுடன் அவனிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

யாழ். நாவற்குழி – ஐயனார் கோவிலடியை சேர்ந்த குறித்த மாணவன் பிரத்தியேக வகுப்பிற்காக, யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையத்திற்கு வந்துள்ளார்.

சின்னக்கடை பகுதியில் மாணவனை வழிமறித்த வழிப்பறி கொள்ளை கும்பல் கஞ்சா இருப்பதாக கூறி மாணவனை அச்சுறுத்தியதுடன் சோதனையும் செய்துள்ளனர்.

இதன்போது மாணவனிடமிருந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்த வழிப்பறி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *