சி.ஐ.டி முன்னிலையில் ஆஜரானார் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த

கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சமூகமளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி கடந்த வருடம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையிலுள்ள குப்பைகளால் பொதுமக்கள் அசௌகரியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *