கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் கஞ்சா உடமையில் வைத்திருந்த இரண்டு பேருக்கு தலா 6500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
முழங்காவில் பிரதேசத்தில் 920 மில்லிகிராம் மற்றும் 760 மில்லி கிராம் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த பொலிஸார் குறித்த இருவரையும் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில், நீதிமன்ற நீதவான் லெனின்குமார் முன்னிலையில் முன்னிறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த இருவருக்கும் தலா ஆறாயிரத்து ஐந்நூறு தண்டப்பணம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.